கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாட்டில் பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

அந்நிலையில் நாளொன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பிசிஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

இதற்கமைய 15, 239 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.