மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் தரச்சான்றிதழ் அற்ற தரமற்ற முகக்கவசங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தைகளில் தரமற்ற முகக்கவசங்கள் இந்நாட்களில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணியப்படும் முகக்கவசத்திற்கு தரச்சான்றிதழ் கட்டாயம் எனவும் குறித்த அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஷாந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.