▪︎மருதமுனை சிவப்பு வலயமாக அறிவிப்பு. விரைவில் லொக் டவுண் சாத்தியம்.

▪︎மேலும் இன்று மூன்று கொரோனா மரணங்கள். இதுவரை மொத்தம் ஐந்து மரணங்கள்.

 ▪︎அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில், மூவர் அதி தீவிர சிகிச்சையிலும் பதினொரு பேர் சாதாரண வார்டுகளிலும்.

▪︎11 ICU கட்டில் வசதியை மட்டும் கொண்டுள்ள கல்முனைப் பிராந்தியத்தில் மற்ற பிராந்திய வளங்களையும் பயன்படுத்த முடியாத நிலமை ஏற்படலாம்.

▪︎அவ்வாறான சவாலான நிலைமையை மனதிற்கொண்டு ஒவ்வொருவரும் அவதானமாகவும் பொறுப்புடனும் செயற்படுங்கள்.

▪︎எம்மையும் நாம் நேசிக்கும் நபர்கள், நண்பர்கள் மற்றும் உறவுகளின் உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வோம்.

1. வெளியே செல்லாமல் இருப்பது.

2. அவசியம் கருதி வெளியே செல்ல வேண்டுமாயின் முகக்கவசம் அணிவது.

3. முகக் கவசம் அணிந்த நிலையிலும் சமூக இடைவேளியப் பேணுவது.

4. சமூக இடைவெளி பேணப்பட்ட போதிலும் சவர்காரம் கொண்டு கைகளையும் உடலையும் நன்கு கழுவிக் கொள்வது.