நாட்டில் கொரோனா தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென் கொரியா தீர்மானித்துள்ளது.இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவற்றில் பி.சி.ஆர் பரிசோதனை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் அடங்கியுள்ளதாக தென்கொரிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா ஒழிப்பிற்கான நடவடிக்கைகளின் போது இலங்கையுடன் நெருக்கமாக பணியாற்றவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.