ஆக்லாந்தில் உள்ள Remuera வில் உள்ள முகவரி ஒன்றில்  நபர்  ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதை அடுத்து நான்கு பேரை 
பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Abbotts Way முகவரியில் குறித்த நபர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஆக்லாந்து நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்கப்பட்ட நபரும் கைது செய்யப்பட்டவர்களும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என நம்பப்படுகிறது.

மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடு பொதுவாக அமைதியாக இருக்கும் ஆனால் நேற்றிரவு அந்த வீட்டில் ஒரு விருந்து உபசாரம் இருந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த வீட்டை பொலிசார் சுற்றி வளைத்துள்ள நிலையில் தடயவியல் குழுக்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.