டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஒரு தலைக்கனம் பிடித்த செல்வந்தர் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில், அவுஸ்திரேலியா - சிட்னியில் நடந்த கத்திக்குத்து தொடர்பான காணொளிகளை சமூக ஊடகங்களில் இருந்து நீக்குமாறு அந்தோனி அல்பானீஸ் இணைய பாதுகாப்பு ஆணையரிற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இதனை தொடர்ந்து, எலான் மஸ்க் சட்டத்திற்கும் கண்ணியத்திற்கும் மதிப்பளிக்காத தலைக்கனம் பிடித்த செல்வந்தராக இருக்கின்றார் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.