Christchurch இல் உள்ள ஒரு குடியிருப்பில் வெடிக்கும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் Redwood புறநகரில் உள்ள Grimseys சாலையில் உள்ள முகவரியில் அந்த வெடிக்கும் பொருளை கண்டுபிடித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த பொலிசார் குறித்த வெடிக்கும் பொருளை எந்த ஆபத்தும் இல்லாமல் அகற்றிய பின்னர் இரவு 7 மணியளவில் சுற்றிவளைப்பு நீக்கப்பட்டது.

வெடிகுண்டு சாதனத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டு இன்று கிறைஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதே குற்றச்சாட்டின் பேரில் 38 வயதுடைய பெண் ஒருவருக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்