Taupō நகர மையத்தில் கார் நிறுத்துமிடத்தில் வாகனம் மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் Ruapehu தெருவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தின் சாரதியுடன் மேலும் இருவர் சிறிய காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சீரியஸ் கிராஷ் யூனிட் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்