தடுப்பூசி அல்லது எதிர்மறையான கொவிட் -19 சோதனைக்கான ஆதாரத்தை சரிபார்க்க, உள்ளூர் iwi உடன் நார்த்லேண்டில் இரண்டு சோதனைச் சாவடிகளை அமைப்பதாக இருப்பதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆக்லாந்தின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படும் போது சோதனைச் சாவடிகள் டிசம்பர் 15 அன்று ஆரம்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 மாவட்டத் தளபதி கண்காணிப்பாளர் டோனி ஹில், காவல்துறையினர் வாகனங்களை நிறுத்துவதாகவும், Tai Tokerau எல்லைக் கட்டுப்பாடு தகுந்த ஆவணங்களைச் சரிபார்க்க அவர்களுக்கு உதவும் என்றும் கூறினார்.

போக்குவரத்து பரபரப்பாக இருக்கும் வேளையில், ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய மாட்டார்கள், தேவையில்லாமல் போக்குவரத்தை நிறுத்த மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் இப்பகுதிக்கு வரும் பயணிகள் தடுப்பூசி அல்லது எதிர்மறையான கொவிட்-19 சோதனைக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று ஹில் கூறினார்.

வடக்குப் போக்குவரத்திற்காக, Uretiti இற்கு அருகிலுள்ள மாநில நெடுஞ்சாலை 1 மற்றும் Maungaturoto அருகே SH12 ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.