நாளை மறுதினம்(08) மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனினும், இன்றும் (06) நாளையும் (07) மின்வெட்டு ஏற்படும் சாத்தியம் காணப்படுகின்றது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் எம்.ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (05) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபையின் கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை சீனாவிடம் ஒப்படைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.