இலங்கை

ஈரான் - இஸ்ரேல் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவை முன்னெச்சரிக்கையாக தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்தை வந்தடையுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரியுள்ளது.

இதற்கமைய, விமான பயணம் ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

பயணப்பாதை மாற்றப்படுவதால் ஏற்படும் தாமதங்களால் பயணிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.