வடமராட்சி கடலில் கரை ஒதுங்கிய இந்திய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு உரியவர் உயிருடன் உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

யாழப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இந்தியப் பிரஜை ஒருவரின் சாரதி அனுமதிப் பத்திரம் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் பரபரப்பு நிலவியது.

இந்தியாவின் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் பரமசிவம், 1974-03-21 அன்று பிறந்த ஒருவருடைய சாரதி அனுமதிப் பத்திரம் எனக்  கண்டு  கொள்ளப்பட்டுள்ளதோடு இவர் அழகு பாண்டி தபாலக பிரிவு  ஆழம்பதூர் சிதம்பரம் தாளுகாவை சேர்ந்தவர் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சாரதி அனுமதிப்பத்திரம் எவ்வாறு கடலிற்கு வந்தது என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்றதனால் ஊடகவியலாளர்களின் தீவிர முயற்சியினால் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு உரியவர் தனது சாரதி அனுமதிப் பத்திரம் அன்மையில் பெய்த பெருமழையில் அடித்துச் சென்றதனை உறுதி செய்தார்.