நேற்றைய தினம் கிறிஸ்ட்சர்ச்  பல்பொருள் அங்காடியில் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

மூர்ஹவுஸ் அவென்யூவில் உள்ள கவுண்டவுன் கார்பார்க்கில் சைடன்ஹாமில் என்ற 18 வயது இளைஞன் நேற்று அதிகாலை தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து  அதிகாலை 2 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

காயமடைந்த இளைஞன் கிறிஸ்ட்சர்ச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் கொலை விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த ஆண்டில் மீண்டும் எங்கள் சமூகத்தில் ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டது ஒரு சோகமான நிகழ்வு என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஜோயல் சைம் கூறினார்.

 இந்த சம்பவத்திற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணை அழைத்து, 211204/5631 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.