கம்பஹா மாநகர சபையில் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் இருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 

அதனையடுத்து , அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த 90 பேரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ,இத்துடன் தொற்றாளர்கள் வசிக்கும் பகுதியிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.