கொரோனா வைரஸ் ​தொற்று காரணமாக, முடக்கப்பட்டிருக்கும் பொலிஸ், கிராம சேவகர் பிரிவுகளில், 51 பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்பிரகாரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், அம்பாறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த 51 பிரிவுகளும் உள்ளன.