நேப்பியரில் (Napier) 90 வயதான ஒரு பெண்ணையும்,அவரது மகனையும் தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கென்னடி வீதியில் (Kennedy Rd) நடந்த தாக்குதலுக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவிக்க முயன்றதாக 25 வயதான நபர் மீது போலீசார் குற்றம் சாட்டினர்.

அவர் இன்று ஹேஸ்டிங்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்நிலையில் அவர் அடுத்த மாதம் நேப்பியர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.