2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இன்று(01) ஆரம்பமாகிறது.

பரீட்சார்த்திகள் காலை 7.45 க்கு முன்னர் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு வருகைதர வேண்டுமென, பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 4,513 மத்திய நிலையங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.