இன்று அதிகாலை கிழக்கு ஆக்லாந்தில் உள்ள Saint Johns Butchery வணிக நிலையத்தில் இடம்பெற்ற மோசமான கொள்ளைச் சம்பவத்தை தொடர்ந்து நான்கு இளைஞர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Felton Mathew Avenue வில் உள்ள குறித்த வணிக நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக தகவல் கிடைத்ததாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் குற்றவாளிகள் Ellerslie / Panmure நெடுஞ்சாலையில் காரில் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து போலீஸ் ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குறித்த கார் இறுதியில் Mission Bay இல் உள்ள Atkin Avenue வில் பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதுடன் நான்கு இளைஞர்களும் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் Saint Johns Butchery மேலாளர் டேவ் கிளார்க் கூறுகையில்...

இந்த கொள்ளை சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர், அவர்கள் உள்ளே நுழைவதற்காக ஒரு பெரிய கண்ணாடி பேனலை உடைத்துள்ளனர் என்று கூறினார்.

அவர்களில் மூன்று பேர் பணத்தைத் தேடி கடைக்குள் நுழைந்தனர், ஒருவர் கத்தியை வைத்திருந்தார்.

மற்ற குற்றவாளி ஒரு ஐஸ்கிரீம் குவியல் எடுத்தார், அதுதான் கடையில் இருந்து திருடப்பட்டது என கிளார்க் கூறினார்.

இந்த சம்பவத்தில் ஏமாற்றமளிக்கும் விடயம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் வயது காரணமாக சில மணிநேரங்களில் காவலில் இருந்து வெளியேறுவார்கள்.

இன்றிரவு அவர்கள் மீண்டும் அதே செயலைச் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்று அவர் மேலும் கூறினார்.