ஆக்லாந்தின் Karaka என்ற இடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து குறித்து இன்று பிற்பகல் 3.35 மணியளவில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துரதிர்ஷ்டவசமாக, குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Karaka சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது. மேலும் விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்