மத்திய ஆக்லாந்து ஸ்கேட் பூங்காவில் நேற்றிரவு நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9.15 மணியளவில் விக்டோரியா பூங்காவில் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு அவசர சேவைகள் விரைந்தன.

அங்கு 17 வயது இளைஞன் காயமடைந்த நிலையில் காணப்பட்டார்.

ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த மரணம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.