மதகுருமார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, கண்டி மாவட்ட மதகுருமார்களுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுகின்றது.

புத்தசாசன அமைச்சர் என்ற விதத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

பதுளை மாவட்ட மதகுருமார்களுக்கு நாளைய தினம் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.