கடந்த மாதம் நெல்சனில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி அன்று St Vincent தெருவில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை Richmond இல் உள்ள Gladstone வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடுமையான உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அந்த நபர் இன்று நெல்சன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதனிடையே மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.