கிறிஸ்ட்சர்ச்சில் 100,000 டொலர்களுக்கு மேல் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வார இறுதியில் Richmond என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நகைகள், மடிக்கணினிகள், எலக்ட்ரானிக்ஸ், பாஸ்போர்ட்கள், பிற தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பொருட்கள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டன.

இந்நிலையில் இன்று ஒரு அறிக்கையில், துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டானியா ஜெல்லிமேன் கூறுகையில்...

நேற்று Shirley மற்றும் Northcote ஆகிய இடங்களில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ஒரு வீட்டில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான பொருட்களை பொலிஸார் மீட்டெடுத்ததாகக் கூறினார்.

இந்நிலையில் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் அனைத்து கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டுதல், மதிப்புமிக்க பொருட்களை கண்ணில் படாதவாறு வைத்திருப்பது  போன்ற வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனத்தில் கொள்வது நல்லது என அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் 24 வயதுடைய பெண் ஒருவரும் 53 வயதுடைய ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் இன்று கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.