நேப்பியரில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் Taradale இன் புறநகரில் உள்ள வீட்டில் நடந்த குறித்த சம்பவத்திற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் சம்பவ இடத்தில் மற்றும் ஒரு நபர் மிதமான காயமடைந்ததுடன் ஒரு வாகனம் பாரியளவில் சேதமடைந்துள்ளது.

இது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பொலிஸார் கருதுகின்றனர்.

இந்நிலையில் "இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவர்கள் எங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைக்கு உதவக்கூடிய எவரும் 105‌ ஐ அழைத்து 220305/3057 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.