Whangārei யில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tikipunga வில் உள்ள Thomas தெருவில் உள்ள குறித்த வீட்டில் அதிகாலை 3.09 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Whangārei மற்றும் Kamo வை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, வீட்டிற்குள் ஒரு நபரைக் கண்டுபிடித்தனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து இன்று காலை வீடு முற்றுகையிடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் இருந்தது.

மேலும் தீயணைப்பு புலனாய்வாளர்கள் மற்றும் பொலிஸ் தடயவியல் குழுவினர் குறித்த வீட்டை ஆய்வு செய்து வருகின்றனர்.

செய்தி நிருபர் - புகழ்