மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனைகளில் இதுவரை 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 18ம் திகதி முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் பயணிகள் தொடர்பில் 11 இடங்களில் மேற்கொள்ளப்படும் Rapid Antigen பாிசோதனை நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.