7-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய பிரதமர் மோடி இன்று சிறப்புரையாற்றினார். கொரோனாவுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் யோகா என்பது நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது என்றார். மேலும் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். என்ற திருக்குறளை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.