இந்தோனேஷியா-வில் உள்ள சிப்பனாஸ் (Cipanas) மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் முதியவர்களுக்கு உயிர் கோழி ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.

மேலும், அந்நாட்டில்  53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்த போதும் தடுப்பூசி செலுத்த பலர் தயங்குவதால் இதுவரை 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதியவர்களிடம் தடுப்பூசி செலுத்தும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு உயிர் கோழி ஒன்றை சுகாதாரத்துறையினர் வழங்கி வருகின்றனர்.