சீனாவின் யுனான் மாகாணத்தில் வனப்பகுதியில் காட்டு யானைகள் படுத்து உறங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால் 15 காட்டுயானைகள் நகருக்குள் சுற்றித்திரிந்துவருகின்றன. இந்நிலையில் அந்த யானைக்கூட்டம் அசதியால் வனப்பகுதியில் படுத்து உறங்கும் காட்சிகள் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.