மத்திய ஆக்லாந்தில் உள்ள Newton சாலை மேம்பாலம் அருகே ஏற்பட்ட காட்டுத்தீயை அடுத்து நகரத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை இரவு முழுவதும் பல மணி நேரம் மூடப்பட்டது.

சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறுகிறது. நள்ளிரவுக்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அதிகாலை 3 மணியளவில் தீ அணைக்கப்பட்டது.

மேம்பாலம் மற்றும் நெடுஞ்சாலை இரண்டும் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தீயினால் பாலத்தில் சில சேதம் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் கூறுகிறது.

செய்தி நிருபர் - புகழ்