மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 3வது அணியின் முதலமைச்சர் வேட்பாளர் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

கடந்த வாரம் கமலை சந்தித்து சரத்குமார் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்த நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சரத்குமார், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து சமக தேர்தலை சந்திக்கும் என்றார்.