இன்று மாலை கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள Roto Kohatu ஏரியில் படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

படகு கவிழ்ந்தபோது அதில் இருவர் இருந்துள்ளனர்.‌ ஆனால் ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டார்.

மாலை 6.50 மணியளவில் இச் சம்பவத்திற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

உடனடியாக அப்பகுதியில் தேடுதல் நடத்தப்பட்ட போதிலும் காணாமல் போன நபர் கண்டுபிடிக்கப்படவில்லை.

பொலிஸ் தேசிய டைவ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேடுதல் பணி நாளை தொடரும் என கூறப்படுகிறது.