இலங்கை

உலகப் புகழ்பெற்ற டைம்ஸ் சஞ்சிகை இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய 100 செல்வாக்கு மிக்க நபர்க ளை பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் இலங்கைப் பெண் திருமதி ரொசன்னா ஃபிளமர் கல்டெராவும் இடம்பெற்றுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் LGBT சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் பெண்மணி திருமதி கல்தேரா என்றும், அவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் தி டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த உரையாடலின் விளைவாக, டைம்ஸ் இதழ் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக டைம்ஸ் 100 என்ற பெயரில் ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது