மத்திய ஆக்லாந்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஒன்பது நாட்களில் இரண்டாவது முறையாக கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் Newmarket இன் Broadway இல் நான்கு பேர் முகமூடி அணிந்து ஒரு நகை கடைக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடையில் இருந்து பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதுடன், வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் குறித்த கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்