நேற்றிரவு ஆக்லாந்தின் தென்மேற்கு நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீ பற்றி எரிந்ததுடன் இருவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் Hillsborough வீதி வளைவுக்கு வடக்கே இரண்டு கார் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான வாகனங்களில் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில் இரண்டு தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.