இலங்கை

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையில் ஜப்பான் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களின் தற்போதைய நிலை, இலங்கையின் புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானிய நிதி உதவியை வழங்குதல் ​போன்ற விடயங்கள் தொடர்பிலும் இரு நாடுகளின் பரஸ்பர உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.