North Island நகரமான Te Kuiti இல் கடந்த மாதம் இடம்பெற்ற ஒரு மோசமான கொள்ளை சம்பவம் மற்றும் கடத்தல் தொடர்பாக கும்பல் உறுப்பினர்கள் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

ஒரு அறிக்கையில், அக்டோபர் 15 சனிக்கிழமையன்று Te Kuiti இல் நடந்த ஒரு மோசமான கொள்ளை மற்றும் கடத்தல் தொடர்பாக Te Awamutu பொலிசார் மாங்க்ரல் கும்பல் உறுப்பினர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரண்டு துப்பாக்கிகள், போலி துப்பாக்கிகள், ஆயுதங்கள், மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடத்தல், கொடூரமான கொள்ளை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர்கள் நான்கு பேர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் 28 மற்றும் 22 வயதுடைய இரண்டு ஆண்கள், முறையே எதிர்வரும் 17 மற்றும் 21 ஆகிய திகதி Te Kuiti மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.

25 வயதுடைய இளைஞன் டிசம்பர் 8ஆம் திகதி ஆஜராகவுள்ளதுடன் மேலும் 25 வயதுடைய இளைஞன் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதனிடையே கும்பல் தொடர்பான குற்றங்களை முறியடிப்பதற்கான காவல்துறையின் முயற்சிகளுக்கு உதவ, தங்கள் சமூகங்களில் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை வழங்குமாறு பொதுமக்களை காவல்துறை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.