Whangārei இல் இரண்டு வணிக நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை அடுத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11.47 மணியளவில்  இடம்பெற்ற முதலாவது திருட்டு சம்பவத்திற்கு பொலிசார் பதிலளித்ததாகவும், அங்கு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வாகனம் ஒன்று சம்பவ இடத்தில் கைவிடப்பட்டதாகவும் Whangārei Kaipara பகுதி தளபதி மொஹமட் அதிக் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு மணி நேரத்திற்குள், இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் Whakapara வில் நடந்த இரண்டாவது திருட்டு சம்பவத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வருகை தந்தனர்.

இந்த கொள்ளையின் போது குறித்த வணிக நிலையம் ஆயுதத்தால் தாக்கி சேதப்படுத்தப்பட்டாக ஆதிக் கூறினார்.

இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பேர் Charles தெரு முகவரியில் கைது செய்யப்பட்டனர்.

இதற்கு ஒரு நாய் பிரிவு பயன்படுத்தப்பட்டது என அவர் தெரிவித்தார்.

அங்கு ஏராளமான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் கஞ்சா மற்றும் பல போதைப் பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் 26 வயதுடைய நபர் ஒருவர் இன்று Whangārei மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஏனைய நான்கு குற்றவாளிகள் இளைஞர் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.