ஆக்லாந்தின் Wattle Downs இல் காரில் ஆண் ஒருவர் இறந்து கிடந்ததை அடுத்து, பெண் ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10.42 மணியளவில் Horbart Crescent இல் நடந்த இந்த சம்பவத்திற்கு பொலிசார் அழைக்கப்பட்டனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குறித்த பெண் Manukau மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

"பொலிஸ் தற்போது மரணம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை, இருப்பினும் விசாரணைகள் தொடர்கின்றன" என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் கரேன் பிரைட் கூறினார்.

Wattle Downs குடியிருப்பாளர்கள் இன்று அப்பகுதியில் தொடர்ந்து போலீஸ் இருப்பை எதிர்பார்க்கலாம் என்று போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.