கிஸ்போர்னில் நேற்றையதினம் ஆயுதம் ஏந்திய ஒரு நபரை தேடிய பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.

நேற்றைய தினம் பிற்பகல் பொலிஸார் அந்த நபரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையின் போது நகருக்கு வடக்கே சுமார் 20 நிமிடங்கள் தொலைவில் உள்ள Turihaua கடற்கரைக்கு அருகே கடலோர மாநில நெடுஞ்சாலை 35ன் ஒரு பகுதியை மூடினர்.

துப்பாக்கி ஏந்தி இருந்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்றும், சம்பவம் தொடர்பாக வேறு யாரும் தேடப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.