Northland இன் Taiharuru என்ற இடத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் பணி இன்று காலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று பாறைகளில் இருந்து மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், இரவு 11 மணிக்கு அவர்கள் வீடு திரும்புவார்கள் என்று குடும்பத்தினர் எதிர்பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் இருவரும் கடைசியாக மாலை 4 மணியளவில் குடும்பத்தினரை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையில், அவர்கள் கடைசியாக காணப்பட்ட இடத்திற்குச் சென்றதாகவும், அவர்களின் வாகனம் மற்றும் சில தனிப்பட்ட உடமைகளை கடற்கரையில் கண்டுபிடித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக தேடுதல் முயற்சிகள் நிறுத்தப்பட்டன, ஆனால் பொலிசார் இப்போது மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை இவர்கள் மீன்பிடிக்கச் செல்வதைக் கண்ட பொதுமக்கள், தங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்..

செய்தி நிருபர் - புகழ்