Rotorua அருகே பெண் ஒருவர் பலத்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டதை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mourea வில் உள்ள மாநில நெடுஞ்சாலை 33 இல் இன்று அதிகாலை 1.55 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ​​ஒரு பெண் பலத்த காயமடைந்திருப்பதைக் கண்டனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்பகுதியில் அதிகளவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.