Northland இல் உள்ள இரண்டு கடைகள் மற்றும் பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் கொள்ளையடித்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்

முதல் திருட்டு இன்று அதிகாலை 2.30 மணிக்கு Whangārei இல் பதிவாகியுள்ளது, மற்ற இரண்டு திருட்டுகளும் Dargaville பகுதியில் அதிகாலை 3 மணிக்குப் பிறகு நடந்ததாக Whangārei காவல்துறையின் மூத்த சார்ஜென்ட் டேரன் சல்லிவன் தெரிவித்தார்.

இந்நிலையில் Poroti அருகே ரோந்து வந்த ஊழியர்கள் அதிகாலை 4 மணிக்கு பிறகு சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை கண்டுபிடித்தனர்.

குறித்த வாகனத்தை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்த நிலையில் வாகனம் நிற்காமல் சென்றது.

பின்னர் Kaihoke விமான நிலையத்திற்கு அருகில் வாகனம் நிறுத்தப்பட்டது.

மேலும் அதில் இருந்த 16 வயது சிறுவன் காவலில் வைக்கப்பட்டார்.

திருட்டுகளின் போது திருடப்பட்டதாகக் கூறப்படும் பல பொருட்கள் வாகனத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டதாக சல்லிவன் கூறினார்.

திருட்டு, வாகனத்தை நிறுத்த தவறியமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை எடுத்துச் சென்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் குறித்த சிறுவன் Whangārei இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.