Mangahauini ஆற்றில் காணாமல் போன நபரின் சடலத்தை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.

இந்த நபர் Gisborne இற்கு வடக்கே Tokomaru விரிகுடாவில் உள்ள ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொலிஸாரின் தேடுதலுக்கு உதவிய பொதுமக்களால் பிற்பகல் 1 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த நபரை முறையாக அடையாளம் காணும் வரை அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மரண விசாரணை அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும் என‌ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.