இந்த வார தொடக்கத்தில் பே ஆஃப் ப்ளெண்டியில் உள்ள Kawerau என்ற இடத்தில் ஏடிஎம் இல் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் Onlsow தெருவில் இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள ATM இல் செக்யூரிட்டி டிரக்கில் இருந்து பணத்தை நிரப்பும் போது துப்பாக்கி முனையில் பாதுகாப்பு ஊழியர்களை குறித்த நபர் தடுத்து நிறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் பணத்தை திருடிக்கொண்டு, அந்த நபர் மெரூன் நிற சுபாரு நிசான் மாக்சிமா காரில் தப்பிச் செல்வதைக் காண முடிந்தது.

இந்நிலையில் தப்பிச் சென்ற வாகனத்தை போலீஸார் புதன்கிழமை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இன்று காலை காவல்துறையும் ஆயுதமேந்திய குற்றவாளிகள் படையும் Kawerau வில் உள்ள ஒரு முகவரியைச் சோதனை செய்த பின்னர் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

45 வயதுடைய அந்த நபர் மீது கடுமையான கொள்ளைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் திங்கட்கிழமை Whakatāne மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன, மேலும் கைதுகள் இடம்பெறலாம் என்று துப்பறியும் மூத்த சார்ஜென்ட் பால் வில்சன் கூறினார்.