Kaikōura வில் உள்ள Goose Bay இல் பறவை ஆர்வலர்கள் குழுவுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை உறுதி செய்துள்ளது.

நாடு முழுவதிலும் இருந்த 11 பேர் பயணித்த படகு இன்று காலை 10 மணியளவில் கவிழ்ந்தது.

தற்போது அப்பகுதியில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், படகில் இருந்து 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அவர்களை முறையாக அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

எதோ ஒன்றின் மீது மோதி படகு கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர், ஆனால் அது என்ன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

Kaikōura மேயர் கிரெய்க் மேக்லே, படகு திமிங்கலத்துடன் மோதியதாக நம்புவதாகக் கூறினார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கடல்சார் நியூசிலாந்து இன்ஸ்பெக்டர் ஒருவர் விசாரணைக்கு உதவ கிறிஸ்ட்சர்ச்சிலிருந்து பயணம் செய்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.