இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து பால்மோரல் கோட்டைக்கு வெளியே பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

லண்டன், இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

இதனிடையே, பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மரணத்தை அடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்தைத் தொடர்ந்து, எலிசபெத் மகாராணி தனது இறுதிமூச்சை விட்ட ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.