ஆக்லாந்தின் புறநகர்ப் பகுதியான Epsom பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிக்காத மோட்டார் ஷெல்லை அகற்றி வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அதை வெடிக்கச் செய்துள்ளனர்.

இப்போது அந்த பகுதியில் இருந்த தடைகள் விலக்கப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் மாலை 5 மணிக்குப் பிறகு குறித்த மோட்டார் ஷெல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வீட்டில் உள்ளவர்கள், Pukenui வீதி மற்றும் அருகிலுள்ள பல தெருக்களில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேற்றிரவு பொலிஸாரால் அந்த வெடிபொருளை அகற்ற முடியவில்லை, எனவே எந்தவொரு அபாயத்தையும் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தற்காப்புப் படையின் வெடிமருந்து அகற்றல் (EOD) வல்லுநர்கள் வெடிகுண்டை அகற்ற தொடர்ச்சியான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது பாதுகாப்பானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.