Bay of Plenty இன் நகர்ப்புறமான Kawerau பகுதியில் ATM இல் நடந்த பயங்கர கொள்ளை சம்பவத்தின் சாட்சிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இன்று காலை 8.45 மணியளவில் Onslow தெருவில் உள்ள ATM இல் பாதுகாப்பு ஊழியர்கள் செக்யூரிட்டி டிரக்கில் இருந்து பணத்தை நிரப்பும் போது  துப்பாக்கியுடன் ஒரு நபர் அவர்களை மிரட்டி ஒரு தொகை பணத்தை கொள்ளையடித்து சென்றார் என துப்பறியும் மூத்த சார்ஜென்ட் பால் வில்சன்  தெரிவித்தார்.

அந்த நபர் மெரூன் நிற நிசான் மாக்சிமா காரில் தப்பிச் சென்றதாக வில்சன் கூறினார்.

பொலிஸார் சாட்சிகளிடம் பேசி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் அந்த நபரை அறிந்தவர்கள், கொள்ளை சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது அப்பகுதியில் இருந்த வாகனங்களில் உள்ள டாஷ்கேம் காட்சிகள் உள்ளவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.