கடந்த வாரம் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து வரும் நிலையில் "மிகவும் ஆபத்தானவர்" என்று விவரிக்கும் ஒரு நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 30 அன்று மத்திய கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள Hereford St பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் உறுதி செய்தனர்.
துப்பறியும் மூத்த சார்ஜென்ட் டானியா ஜெல்லிமேன் கூறுகையில்...
ஹென்ட்ரிக்ஸ் ராவிரி ஜூரி என்ற 27 வயதான குறித்த நபரை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்ய வாரண்ட் உள்ளது.
அவரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோருகின்றது ஆனால் அவர் "மிகவும் ஆபத்தானவர்" மற்றும் அணுகக்கூடாது என்று எச்சரிக்கின்றனர்.
யாரேனும் அவரைப் பார்த்தாலோ அல்லது அவர் எங்கிருக்கிறார் என்று தெரிந்தாலோ உடனடியாக 111க்கு அழைக்க வேண்டும் என்று ஜெல்லிமேன் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் குணமடைந்து வருகிறார் என ஜெல்லிமேன் கூறினார்.
இதனிடையே தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொண்டு 220830/8157 என்ற கோப்பு எண்ணை மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.